சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து துறை களப்பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு ஜிங்க் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகளை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிங்க் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் நாளை முதல் 10 நாட்களுக்கு வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.